மீலாது நபியையொட்டி, சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் மதுக் கடைகள், மதுக் கூடங்களுக்கு புதன்கிழமை (நவ.21) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மீலாது நபியையொட்டி, சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கும் மதுக் கடைகள், மதுக் கூடங்கள், உணவகங்களுடன் கூடிய மதுக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து மதுக் கடைகளும் புதன்கிழமை (நவ.21) மூட வேண்டும். இதை மீறி செயல்படும் மதுக் கடைகள், மதுக் கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.