தினத்தந்தி நாளிதழ் அதிபர் மறைந்த பா.சிவந்தி ஆதித்தனாரின் 83-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், தமிழக அமைச்சர்கள் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினர்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் தினத்தந்தி இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன், மாலைமலர் இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் அவரது படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, க.பாண்டியராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், தமாகா மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், கவிஞர் காசி முத்துமாணிக்கம் உள்ளிட்டோர் அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.