சென்னை

கடற்கரை-வேளச்சேரி இடையே பராமரிப்பு பணி: ரயில் சேவையில் இன்று மாற்றம்

DIN

சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்புப் பணி நடக்க உள்ளதால், ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.17) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 சென்னை கடற்கரை-வேளச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் ஞாயிற்றுக்கிழமை (பிப்.17) காலை 7.50 முதல் பிற்பகல் 2.35 மணி வரை நடைபெற உள்ளது. இதன்காரணமாக, இரு மார்க்கத்திலும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு காலை 8, 8.20, 8.40, 9.00, 9.20, 9.40, 9.50, 10.00, 10.20, 10.40, முற்பகல் 11, 11.20, 11.40, நண்பகல் 12, 12.20, 12.40, மதியம் 1, 1.20, 1.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதன்பிறகு, சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு மதியம் 2 மணி முதல் மின்சார ரயில் புறப்பட்டு செல்லும்.
 மறு மார்க்கமாக, வேளச்சேரி-சென்னை கடற்கரைக்கு காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30, 10.40, 10.50 முற்பகல் 11.10, 11.30, 11.50, நண்பகல் 12.10, 12.30, 12.50, மதியம் 1.10, 1.30, 1.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. இதன்பிறகு, வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 2.10 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT