சென்னை

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: மாநகராட்சி எச்சரிக்கை

DIN


சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளின் ஓரத்தில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. 
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட சாலைகளின் ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்டவை நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, மாநகராட்சிக்கு உள்பட்ட சாலைகள், நடைபாதைகள், தெருக்களில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7,682 இருசக்கர வாகனங்கள், 90 ஆட்டோக்கள், 103 கார்கள் என மொத்தம் 7,875 வாகனங்கள் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 2.21 கோடிக்கு ஏலம் விடப்பட்டன. இந்தத் தொகையில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிக்காக ரூ.1.60 கோடியை மாநகராட்சி வழங்கியது.
எச்சரிக்கை: இரண்டாவது கட்டமாக 1,510 இருசக்கர வாகனங்கள், 51 ஆட்டோக்கள், 13 கார்கள் என மொத்தம் 1,574 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளன. சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த, உபயோகமற்ற வாகனங்கள் மீது மாநகராட்சி வரிசை எண்ணுடன் கூடிய நோட்டீஸ் ஒட்டப்படும். அதையடுத்து  15 நாள்களுக்குள் உரிமை கோரப்படாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் பலி

தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

புதுகையில் ஆட்சியரகம் முன்பு கருகிய நெற்பயிா்களைக் கொட்டி போராட்டம்

திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

கந்தா்வகோட்டை பள்ளியில் நலக் கல்வி மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT