பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 40 ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான முகாமினை காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனை நடத்தி வருகிறது.
மும்பையைச் சேர்ந்த சாஹாச்சாரி அறக்கட்டளை, சென்னையில் உள்ள ஐக்கிய கல்வி அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளன.
கடந்த 21-ஆம் தேதி தொடங்கிய இந்த அறுவை சிகிச்சை முகாமானது, அடுத்த மாதம் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதய பாதிப்பு, நரம்பு பிரச்னைகள், எலும்பு - மூட்டு நோய்கள், புற்றுநோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இந்த முகாம் மூலம் பயனடைவார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பிரபல அறுவை சிகிச்சை நிபுணர்கள் பலர் இந்த முகாமில் கலந்துகொண்டு இலவசமாக குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இசைவு தெரிவித்துள்ளதாகவும் காஞ்சி காமகோடி மருத்துவமனை சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.