ஞாயிற்றுக்கிழமை (20.1.19) மாலை 6 மணிக்கு புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழாவில், பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி நீதிபதி ஆர்.மகாதேவன் பேருரை ஆற்றுகிறார். பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இராமேஸ்வர முருகன் சிறப்புரை ஆற்றுகிறார். பபாசி தலைவர் எஸ்.வயிரவன் வரவேற்புரையும், துணைத் தலைவர் பெ.மயிலவேலன் நன்றியுரையும் ஆற்றுகிறார்கள்.