சென்னை ஆவடி அருகே மோட்டார் பைக் மீது லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
திருமுல்லைவாயல் செந்தில்நகர் மகாத்மாகாந்தி தெருவைச் சேர்ந்தவர் கே.விமல்பிரபு (23). இவர் வெள்ளவேட்டில் உள்ள ஒரு தனியார் குளிர்பான நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இவர் தனது மோட்டார் சைக்கிளில் பட்டாபிராம் அணைக்கட்டுச்சேரி மேம்பாலத்தில் வியாழக்கிழமை சென்றபோது எதிரே வந்த ஒரு லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.