வரும் 27 முதல் பிரேமலதா பிரசாரப் பயணம்

மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா  வரும் 27 முதல்  ஏப்ரல் 16 ஆம் தேதி வரை பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா  வரும் 27 முதல்  ஏப்ரல் 16 ஆம் தேதி வரை பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதுகுறித்து அக்கட்சி சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடைபெறவுள்ள 2019 மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிட உள்ளது. இந்தக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திருப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளார். வரும் 27 ஆம் தேதி மாலை 4 மணி முதல் தொடங்கும் பிரசாரம்  ஏப்ரல் 16 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com