செங்கல்பட்டு, திருப்போரூரில் இன்று உள்ளூர் விடுமுறை

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் நடைபெற உள்ள சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் வருவாய் வட்டங்களுக்கு

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் நடைபெற உள்ள சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் வருவாய் வட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (நவ. 13) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் கந்தசாமி கோயிலில் தற்போது கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் ஐந்தாம் நாளாகிய செவ்வாய்க்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் திரள்வர். இதை முன்னிட்டு, விழா நாளன்று திருப்போரூர், திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு வருவாய் வட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இங்குள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை என்பதால் அதை ஈடுசெய்ய, வரும் 17ஆம் தேதியை (சனிக்கிழமை) வேலை நாளாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com