கூடுவாஞ்சேரி அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது பைக் மோதியதில் அவர் காயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் செளந்தர
ராஜன்(80). அவர் கடந்த 10ஆம் தேதி, கூடுவாஞ்சேரியில் உள்ள தனது மகன் வீட்டிற்குச் செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது வேகமாக வந்த ஒரு பைக் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சௌந்தரராஜன், சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் ஞாயிற்றுக்
கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.