மதுராந்தகத்தை அடுத்த பெருங்கரணை கிராமத்தில் உள்ள நடு பழனி மரகத தண்டாயுதபாணி முருகர் கோயிலில் புதன்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கோயிலில், கடந்த 8-ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. விழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைக ள் நடைபெற்றன. வெள்ளிக் கவசத்தால் மூலவர் அலங்காரம் செய்யப்பட்டது. விழாவையொட்டி, லட்சார்ச்சனை நடைபெற்றது.
கந்த சஷ்டி விழாவின் கடைசி நாளான புதன்கிழமை மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நடுபழனி தண்டாயுதபாணி தத்தாத்ரேயர் அறக்கட்டளை நிர்வாகிகளும், கிராம மக்களும் செய்து இருந்தனர்.