கூட்டுறவு வார விழாவையொட்டி வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65ஆவது கூட்டுறவு வார விழா புதன்கிழமை தொடங்கியது. இதனை, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, செங்கல்பட்டு சரகம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், காயரம்பேடு நகர கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் நந்தி வரம் கூடுவாஞ்சேரியில் உள்ள சமூக நலக்கூடத்தில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இதில், செங்கல்பட்டு சரக துணைப் பதிவாளர், கள அலுவலர், கூட்டுறவு சார்பதிவாளர், சங்கப் பணியாளர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். முகாமில், 30-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.