திருப்போரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்ட் லைன் அமைப்பு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக் குழந்தைகள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில், திருப்போரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
பள்ளித் தலைமையாசிரியர் அசோகன், என்.ராமச்சந்திரன், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.