ஆலைமூடல், ஆள்குறைப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்து சிஐடியுவினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். இதில், பெருநிறுவனங்களில் வேலையிழந்த திரளான தொழிலாளர்கள் கலந்துகொண்டு, நிறுவனங்களுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
இதில், சிஐடியு, மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.