மாவட்ட அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் தேர்வுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்பேரில், தமிழக அரசு ஊர்தி ஓட்டுநர் சங்கத்தின் அனைத்து மாவட்ட, மாநில நிர்வாகிகளைத் தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படவுள்ளது. இத்தேர்தலை நடத்துவதற்கு, வழக்குரைஞர் ஆணையாளராக, செந்தில்குமார், செல்வகுமார், அஸ்வின், ராஜசிம்மன் ஆகியோரை நீதிமன்றம் நியமித்துள்ளது.
அதன்படி, அக்டோபர் 10ஆம் தேதிக்குள் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை நடைபெறும். மாவட்ட உறுப்பினர் பட்டியலை அக்டோபர் 20ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதி வாய்ந்த வாக்காளர் பட்டியல் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியிடப்படும். ஆட்சேபணை ஏதேனும் இருந்தால் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.
தகுதி வாய்ந்த இறுதி வாக்காளர் பட்டியல் நவம்பர் 1ஆம் தேதி வெளி
யிடப்படும். மேலும், வேட்பு மனுக்களை அந்தந்த மாவட்டங்களில் நவம்பர் 2 முதல் 5 ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களை நவம்பர் 6 முதல் 10ஆம் தேதிக்குள் திரும்பப் பெறலாம். மனுக்களின் பரிசீலனை நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்படும்.
இதையடுத்து, இறுதி வாக்காளர் பட்டியல் நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப்படும். தொடர்ந்து, நவம்பர் 17ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 6 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.