விவசாயிகள் குறை தீர் கூட்டம் வியாழக்கிழமை (செப்டம்பர் 27ஆம் தேதி) நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகளின் குறை தீர் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, வரும் 28ஆம் தேதி நடைபெறவிருந்த குறை தீர் கூட்டம், நிர்வாகக் காரணங்களால் 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, அன்று பிற்பகல் 2 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் கலந்துகொண்டு வேளாண், அதன் சார்புத் துறைகள் தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காணலாம் என ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.