கல்பாக்கத்தில் கட்டடக் கலை திருவிழா

கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மிடாஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில், கட்டடக் கலை மாணவர்களை ஒருங்கிணைக்கும் வகையிலான, டிரிகோனா 2019 கட்டடக் கலை திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மிடாஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில், கட்டடக் கலை மாணவர்களை ஒருங்கிணைக்கும் வகையிலான, டிரிகோனா 2019 கட்டடக் கலை திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
 கட்டடக் கலை மாணவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் இரண்டாண்டுக்கு ஒருமுறை இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
 இதில், நிகழ்ச்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட கருத்தரங்கம், விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. கட்டடக் கலையில் உருவாகி வரும் பல்வேறு முன்னேற்றங்கள் குறித்து அத்துறை நிபுணர்கள் விளக்கினர்.
 முன்னதாக சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற துறைசார்ந்த வல்லுநர் ஹஃபீஸ் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி வைத்துப் பேசினார். விழாவில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com