கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான நேர்காணல் பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்குகிறது.
கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் திரளானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் காஞ்சிபுரம் கால்நடை பெரு மருத்துவமனை வளாகத்தில் பிப்ரவரி 22 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அன்றைய நாள்களில் காலை 9 முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையிலும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பாணை தனியே உரிய நபர்களுக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எனவே, அதில் குறிப்பிட்டுள்ள நாளில் அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகள், நகல்களுடன் கலந்து கொள்ளலாம். நேர்காணலில் கலந்து கொள்வோருக்கு பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது.
நேர்முக அழைப்பாணை இல்லாதோர் நேர்முகத் தேர்வு வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும், விவரங்களுக்கு 044-27222689 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.