காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகள், வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
இதில், வாக்காளர்கள் பெயரைச் சேர்த்தல், நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறவுள்ளது.
வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர் சிறப்பு முகாம்களில் படிவங்கள் 6, 6ஏ, 7, 8, 8ஏ ஆகியவற்றைப் பூர்த்தி செய்து உரிய வாக்குச்சாவடி நிலை அலுவலர், நியமன அலுவலர் ஆகியோரிடம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.