சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு முகாம் வரும் வியாழக்கிழமை (பிப். 28) நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து சமையல் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் பதிவு செய்வதில் ஏற்படும் காலதாமதம், நுகர்வோர் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் தாமதம் உள்ளிட்ட குறைபாடுகளைத் தீர்க்க மாதந்தோறும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்துக்கான எரிவாயு குறைதீர் முகாம் வரும் 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பொதுமக்கள் நல்லுறவு மையத்தில் நடைபெறவுள்ளது. இதில், அனைத்து எரிவாயு நுகர்வோர்களும் கலந்துகொண்டு தீர்வு காணலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.