திடக்கழிவு மேலாண்மை ஊழியர்கள் 40 பேருக்கு நல உதவிகள்

புதுப்பட்டினம் ஊராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை துப்புரவுப் பணியாளர்கள் 40 பேருக்கு புதுப்பட்டினம் வணிகர் சங்கம் சார்பில் வேட்டி, சேலை, ஊக்கத் தொகை ஆகியவை


புதுப்பட்டினம் ஊராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை துப்புரவுப் பணியாளர்கள் 40 பேருக்கு புதுப்பட்டினம் வணிகர் சங்கம் சார்பில் வேட்டி, சேலை, ஊக்கத் தொகை ஆகியவை வழங்கப்பட்டன.
தனியார் மண்டபத்தில் வியாழக்கிழமை நடந்த இந்நிகழ்ச்சிக்கு வணிகர் சங்கத் தலைவர் காதர் உசேன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கிங் உசேன், செயலர் சுகுமாரன், துணைச் செயலர் சம்சுகனி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பணியாளர்கள் 40 பேருக்கு வேட்டி, சேலை, ஊக்கத் தொகை ஆகியன வழங்கப்பட்டன. சங்க நிர்வாகிகள் காதர்  பாஷா, ஷரீஃப், நீலகண்டன், ஏழுமலை மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com