பச்சையம்மன் கோயிலில் பக்தர்கள் தங்கும் அறைகள்:   ரூ.18 லட்சத்தில் கட்ட அதிகாரிகள் ஆய்வு

மானாம்பதிக்கு அருகே உள்ள பச்சையம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் அறைகள் கட்ட நடவடிக்கை
பச்சையம்மன் கோயிலில் பக்தர்கள் தங்கும் அறைகள்:   ரூ.18 லட்சத்தில் கட்ட அதிகாரிகள் ஆய்வு


மானாம்பதிக்கு அருகே உள்ள பச்சையம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் அறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரத்தை மாவட்டம், உத்தரமேரூர் வட்டம், மானாம்பதிக்கு அருகே பச்சையம்மன், மன்னார்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆடி, தை மாதங்களில் சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். அதேபோல், வாரம்தோறும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் காஞ்சிபுரம், உத்தரமேரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் பொங்கலிடுதல், முடி காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். 
இந்நிலையில், பக்தர்கள் தங்குவதற்கான வசதி இக்கோயில் பகுதியில் இல்லை. போதிய அடிப்படை வசதிகளும் இல்லை. இது குறித்து பக்தர்கள் சார்பில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து, ரூ.18 லட்சம் செலவில் பக்தர்கள் தங்கும் அறைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆணையரின் அனுமதிக்கு கோயில் நிர்வாகம் விண்ணப்பம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கும் அறைகள் அமையவுள்ள இடத்தில் வேலூர் உதவி கோட்டப் பொறியாளர் மோகனசுபா, கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com