தேசிய தீத்தடுப்பு ஒத்திகை

மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில், தேசிய தீத்தடுப்பு ஒத்திகை திங்கள்கிழமை நடத்தப்பட்டது. 
தேசிய தீத்தடுப்பு ஒத்திகை

மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில், தேசிய தீத்தடுப்பு ஒத்திகை திங்கள்கிழமை நடத்தப்பட்டது. 
தேசிய தீ விபத்து தடுப்பு தினத்தையொட்டி, மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில், அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேசிய தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் க.முரளி தலைமை வகித்தார். 
இதில், 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் முன்னிலையில் தீ விபத்து ஏற்படுவதைத் தவிர்த்தல், தீயை அணைக்கும் முறை, விபத்தில் பாதிக்கப்பட்டோரை மீட்பது, தீயை பாதுகாப்பாக கையாள்வது, தீயணைப்பு உபகரணங்களை கையாளும் முறை உள்ளிட்ட பல்வேறு தீத்தடுப்பு விழிப்புணர்வு முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com