வருமானவரி செலுத்துவது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்

மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா விடுதிகள், உணவு விடுதி உரிமையாளர்கள் முறையாக வருமானவரி செலுத்துவது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா விடுதிகள், உணவு விடுதி உரிமையாளர்கள் முறையாக வருமானவரி செலுத்துவது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தாம்பரம் வருமானவரித் துறை அதிகாரி எம்.பி. சீனிவாசன் தலைமை வகித்தார்.  வருமானவரி அதிகாரிகள்  எஸ். ராமஸ்வாமி,  சி.எஸ்.சரவணன்,  ஸ்ரீவித்யா நடராஜன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். 
இதில், ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் முறை குறித்து காணொலிக் காட்சி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.   
இக்கூட்டத்தில் மாமல்லபுரம் விடுதிகள், ஓட்டல்கள் சங்கத் தலைவர் என்.ஜனார்த்தனம், காஞ்சிபுரம் மாவட்ட ஓட்டல்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com