காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல் காஞ்சிபுரம், உத்தரமேரூர் பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து செவ்வாய்க்கிழமை ஆதரவு கோரினார்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார். அதன்படி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். பின்னர், எம்.ஜி.ஆர்., அம்பேத்கர், அண்ணாவின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, உத்தரமேரூர், சாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, பஜார் வீதி வழியாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.