காஞ்சிபுரம், ஸ்ரீ பெரும்புதூர் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கும், திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மார்ச் 19 முதல் 26-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பா.பொன்னையா தெரிவித்திருந்தார். அதன்படி, முதல் நாளான செவ்வாய்க்கிழமை அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவர் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், காலை 11 முதல் மாலை 3 மணி வரை எந்தவொரு வேட்பாளரும் வரவில்லை.