நவ.22-இல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

திருவள்ளூர் அருகே பொதுமக்கள் பயன்பெறும் நோக்கத்தில் நவம்பர் 22-ஆம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் மகேஸ்வரி


திருவள்ளூர் அருகே பொதுமக்கள் பயன்பெறும் நோக்கத்தில் நவம்பர் 22-ஆம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் அரசின் சார்பில் செயல்படுத்தப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கவும், அத்திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு எளிதாகக் கிடைக்க ஏற்பாடு செய்யும் வகையில் மாதந்தோறும் குறிப்பிட்ட கிராமத்தைத் தேர்வு செய்து மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இம்மாதத்திற்கான மக்கள் தொடர்பு முகாம், திருவள்ளூரை அடுத்த பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த குத்தம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நவம்பர் 22-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த முகாமில் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். அதனால் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று தங்கள் குறைகளை நேரடியாகவோ அல்லது மனுக்கள் மூலமாகவோ இம்முகாமில் அளித்து பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com