சென்னை மண்டல இந்தியன் ஆயில் முகவர் சங்கத்தின் 11-ஆவது பொதுக்குழு கூட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எளாவூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர்
கே.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் பி.ஸ்ரீதர், பொருளாளர் டி.மணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, சங்கத்தின் ஆண்டறிக்கை உறுப்பினர்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், தேர்தல் குழு அமைக்கப்பட்ட நிலையில், கடந்த முறை பொறுப்பில் இருந்தவர்களே மீண்டும் பொறுப்பில் இருக்க வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, முகவர்களுக்கான தொழில் சார்ந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் வங்கி நிதி உதவி பெறுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இந்தியன் ஆயில் முகவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.ஸ்ரீதர் நன்றி கூறினார்.