பொதுத் துறை பாதுகாப்பு குறித்த கூட்டம்

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் வெள்ளிவிழா மாநாட்டையொட்டி, பொதுத்துறை பாதுகாப்பு குறித்த பொதுக் கூட்டம் மற்றும் கலைநிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி


காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் வெள்ளிவிழா மாநாட்டையொட்டி, பொதுத்துறை பாதுகாப்பு குறித்த பொதுக் கூட்டம் மற்றும் கலைநிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி பஜாரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, காப்பீட்டுக் கழக சென்னை கோட்டம் 2-இன் பொதுச் செயலாளர் கு.மனோகரன் தலைமை வகித்தார். இதில், தென் மண்டல துணைப் பொருளாளர் வி.ஜானகிராமன், முகவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ். ஏ.கலாம் ஆகியோர் எல்ஐசி-யின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினர்.
கூட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணைத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், எதற்கும் லஞ்சம் வாங்காத ஒரே நிறுவனம் நமது இந்திய காப்பீட்டுக் கழகமாகத்தான் இருக்க முடியும். சாதாரண மக்கள் வசிக்கும் கிராமங்களில் கூட ஆயுள் காப்பீட்டுக் கழகம் தங்கள் கிளையை நிறுவி சேவையாற்றி வருகிறது என்றார்.
நிகழ்வில், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் தென் மண்டல துணைத் தலைவர் கே.சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com