விளையாட்டில் சிறப்பிடம்:  என்சிசி மாணவர்களுக்கு பாராட்டு

சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் நடந்த விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கடம்பத்தூர் அரசு

சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் நடந்த விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த என்சிசி மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர். 
சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த பத்து நாள்களாக 1 தமிழ்நாடு மெடிக்கல் யூனிட் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் பல்வேறு தனியார் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த என்சிசி மாணவ, மாணவிகள் 500 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டியை கேம்ப் கமாண்டர் கர்னல் கருமலை தலைமை வகித்துத் தொடங்கி வைத்தார். போட்டியில் கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தடகளம், கைப்பந்து, கூடைப்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்றனர்.
இந்த மாணவர்களுக்கு கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு என்சிசி அலுவலர் சா.அருணன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை வே.ரேவதி, பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார். நிகழ்வில், உதவித் தலைமையாசிரியர் பாலமுருகன், என்.சி.சி. அலுவலர் பரமானந்தம், உடற்கல்வி ஆசிரியர் சிவகுமார் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com