மாணவர்கள் தனித் திறன்களை வளர்த்துக் கொள்வதோடு, இலக்கை அடைவதற்கு கடினமாக உழைக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கூறினார்.
திருவள்ளூர் அருகேயுள்ள ஸ்ரீநிகேதன் பாடசாலைப் பள்ளியின் 8-ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விவேக் பேசியது:
மாணவர் ஒவ்வொருவரும் தாய், தந்தையை அடுத்து பாடம் கற்பித்த ஆசிரியர்களை என்றும் மறக்கக் கூடாது. பள்ளிப் பருவத்திலேயே தனித்திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்வதோடு, விரும்பிய இலக்கை அடைய திட்டமிட்டு, கடினமாக உழைக்க வேண்டும். அது எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார் விவேக்.
இவ்விழாவில் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.