லாரி மோதி எல்ஐசி முகவர் சாவு

கும்மிடிப்பூண்டியை அடுத்த நத்தம் பகுதியைச் சேர்ந்த  எல்ஐசி முகவரான ஜி.சங்கர்(48) திங்கள்கிழமை பைக்கில் சென்றபோது லாரி மோதி உயிரிழந்தார்.


கும்மிடிப்பூண்டியை அடுத்த நத்தம் பகுதியைச் சேர்ந்த  எல்ஐசி முகவரான ஜி.சங்கர்(48) திங்கள்கிழமை பைக்கில் சென்றபோது லாரி மோதி உயிரிழந்தார்.
நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜி.சங்கர். கும்மிடிப்பூண்டி பகுதியில் எல்ஐசி முகவராகப் பணிபுரிந்த அவர், பஜாரில் டைல்ஸ் கடையும் நடத்தி வந்தார். அவர் திங்கள்கிழமை சிப்காட் பகுதிக்கு சென்று பைபாஸ் பஜார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். பை பாஸ் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதன் காரணமாக அருகில் உள்ள சர்வீஸ் சாலை வழியாகவே ஓராண்டாக போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால் இந்தப் பகுதியில் எப்போதும் வாகன நெரிசல் மிகுந்து காணப்படும்.
இந்நிலையில் சங்கர் வந்த பைக்கின் முன் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென பிரேக் பிடிக்க, பின்னால் வந்த சங்கரும் தனது பைக்கை பிரேக் பிடித்து நிறுத்தினார். அப்போது சங்கரின் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது.
இந்த விபத்தில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அறிந்ததும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் விரைந்து சென்று, அவரது சடலத்தைக் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com