திருவள்ளூரில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் நடத்தப்பட்ட ஸ்ரீசத்ய நாராயண பூஜையில் திரளானோர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் நகராட்சி எதிரே தனியார் வளாகத்தில் தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், செவ்வாய்க்கிழமை சத்ய நாராயண பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் வேதாந்தம்ஜி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் கோபால்ஜி கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி வைத்து பூஜையைத் தொடங்கி வைத்தார்.
இதில், வறுமையைப் போக்குதல், புத்திர பாக்யம், வியாபார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுக்கு 450-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பூஜையில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விசுவ ஹிந்து பரிஷத்தின் மாநில துணைத் தலைவர் கிருஷ்ணாமாச்சாரி, திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.