தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்டவர்களுக்குப் பாராட்டு

மாதவரம் அருகே ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மாதவரம் அருகே ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பெண்ணை காப்பாற்றி மீட்டவர்களுக்கு மாதவரம் போலீஸார் பாராட்டு தெரிவித்தனர்.
 சென்னை, மாதவரத்தை அடுத்த மாத்தூர் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்தவர் பிளஸ்ஸி (24). தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக வேலை செய்து வருகிறார். பிளஸ்ஸிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் மாதவரம் அருகே உள்ள இரட்டை ஏரியின் ஒரு பகுதியில் இருந்து குதித்து அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 
அப்போது அவ்வழியாகச் சென்ற சிலர் அவரை மீட்டு, மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, மாதவரம் காவல் ஆய்வாளர் செல்வகுமார், தலைமைக் காவலர்கள் செந்தாமரை, மகேஸ்வரி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி, பிளஸ்ஸியின் உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து, தற்கொலை முயற்சியில் இருந்து மீட்டு, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த ராஜன், கண்ணா, வாசு ஆகிய 3 பேரையும் போலீஸார் பாராட்டி, நன்றி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com