மீஞ்சூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மீஞ்சூர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (27). இவர், கடந்த 10-ஆம் தேதி, அப்பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில் பின்புறம் இருக்கும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து, மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், லட்சுமணனை அடித்துக் கொலை செய்து, கிணற்றில் தள்ளியது தெரியவந்தது.
இதையடுத்து, லட்மணனை கொலை செய்ததாக, மீஞ்சூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த அஜித் (26), மணிகண்டன் (26), காட்டூரை அடுத்த வேலூர் பகுதியைச் சேர்ந்த இன்பரசன் (22) மற்றும் 17 வயதுடைய இருவர் என 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், லட்சுமணன் வைத்திருந்த விலை உயர்ந்த செல்லிடப்பேசி மற்றும் அவர் வைத்திருந்த பணத்தைப் பறிக்கும் நோக்கில் கொலை செய்தது தெரியவந்தது.