சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி, திருவள்ளூர் பாரதிதாசன் மேல்நிலைப் பள்ளி சார்பில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தாளாளர் மோ.தி.உமாசங்கர் தலைமை வகித்தார். இதில், தாய்மொழி தினத்தின் சிறப்பு குறித்து தமிழாசிரியர்கள் மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளித்தனர். அதைத் தொடர்ந்து, தமிழ்த் துறை சார்பில் கட்டுரை, கவிதை மற்றும் ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில், மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பின்னர், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மேரி, தே.குமரீஸ்வரி ஆகியோர் சிறப்பிடம் பெற்றவர்களைப் பாராட்டி பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.