3 மாநிலத் தேர்தல்களில் வெற்றி: காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தக் கட்சியினர் பட்டாசு

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தக் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
திருவண்ணாமலை நகர காங்கிரஸ் சார்பில், காந்தி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரத் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான என்.வெற்றிச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் தி.சீனுவாசன், அண்ணாச்சி, ஆர்.ஏ.குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்காக பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 
மேலும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் என்.சின்னதுரை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.கதிர்காமன், மாவட்டத் தலைவர் கே.குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போளூர்: போளூரில் நகர காங்கரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும், பட்டாசு வெடித்ததுடன், பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கினர். நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.எம்.ஜி.பழனி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் திருஞானசம்பந்தமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, அண்ணாமலை, காசிராஜன், டீ கடை வாசுதேவன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com