அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

பாடம், பொது அறிவு குறித்த கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளித்த தேவிகாபுரம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவிகளைப் பாராட்டி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் புத்தகங்களை பரிசாக

பாடம், பொது அறிவு குறித்த கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளித்த தேவிகாபுரம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவிகளைப் பாராட்டி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவிகளிடம்  பாடம் சம்பந்தமாகவும், பொது அறிவு, செய்தித்தாள் வாசிப்புத் திறன் குறித்தும் அவர் கேள்விகளை கேட்டார். அவற்றுக்கு மாணவிகள் உடனுக்குடன் பதிலளித்தனர். தொடர்ந்து, சிறப்பாக பதிலளித்த மாணவிகளைப் பாராட்டி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் புத்தகங்களை பரிசாக வழங்கினார். உடன், பள்ளித் தலைமை ஆசிரியர் சரவணன், உதவி ஆசிரியர்கள் சடகோபன், கீதா மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com