போளூரை அடுத்த ஜமுனாமரத்தூரில் அதிமுக 47-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் துரை முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி வரவேற்றார். கூட்டத்தில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றியதுடன், ஏழை, எளியோருக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதில், தலைமைக் கழகப் பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.