வந்தவாசியை அடுத்த பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா, ஐம்பெரும் விழிப்புணர்வு விழா புதன்கிழமை நடைபெற்றன.
பள்ளித் தலைமை ஆசிரியை தேன்மொழி தலைமை வகித்தார். மேலும், மரம் வளர்த்தல், பாரம்பரிய உணவு வகைகளை உண்ணுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், கிராம நூலகம் சென்று புத்தகங்களைப் படித்தல், டெங்கு விழிப்புணர்வு ஆகியவை குறித்து அவர் விளக்கிக் கூறினார்.
பள்ளி ஆசிரியர்கள் சிவாஜி கணேசன், அருள்ஜோதி, காளிதாஸ், பெற்றோர் - ஆசிரியர் கழக மற்றும் மேலாண்மைக்குழு நிர்வாகிகள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.