கண்ணமங்கலத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருஞானம் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
கண்ணமங்கலத்தில் உள்ள கடைத் தெரு, வேலூர் - திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி, மளிகைக் கடைகள், இனிப்பகங்கள் உள்பட பல்வேறு கடைகளில் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆய்வின்போது, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், தலைமை எழுத்தர் வீரமணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.