செய்யாறு அருகே தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு எம்எல்ஏ தூசி கே.மோகன் ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி வழங்கினார்.
செய்யாறு வட்டம், ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சித்திரை. இவரது கூரை வீடு மின் கசிவு காரணமாக சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமானது.
இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.5 ஆயிரமும், வருவாய்த் துறை சார்பில் வழங்கப்படும் அரசு நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரமும், 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், இலவச வேட்டி, சேலை ஆகியவற்றையும் வழங்கி ஆறுதல் கூறினார்.
நிகழ்ச்சியின்போது, வட்டாட்சியர் க.மகேந்திரமணி, அதிமுக மாணவரணி மகேந்திரன், அனக்காவூர் மண்டல துணை வட்டாட்சியர் முருகானந்தம், தேத்துறை வருவாய் ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் அருள், பாலமுருகன், கோபிநாதன், கிராம உதவியாளர் ராஜேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.