போளூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

போளூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக ஊராட்சிச் செயலர்கள், கிளைச் செயலர்கள், வாக்குச் சாவடி குழு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்


போளூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக ஊராட்சிச் செயலர்கள், கிளைச் செயலர்கள், வாக்குச் சாவடி குழு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
போளூரை அடுத்த மாம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் ஜெயசுதா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது: போளூர் ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளிலும் அமைக்கப்படும் வாக்குச்சாவடி குழுக்களில் பெண்களையும் நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும்.
வரவிருக்கும் மக்களவை, சட்டப் பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்றார். இதில், ஊராட்சிச் செயலர்கள் ராஜசேகரன், சின்னதம்பி, எம்ஜிஆர் மன்ற ஒன்றியச் செயலர் பகராபழனி மற்றும் அதிமுக பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com