வந்தவாசி நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்புப் பணிகளை மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜேந்திரன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
வந்தவாசி காந்தி சாலை, ஆரணி சாலை, காஞ்சிபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாகச் சென்று டெங்கு தடுப்புப் பணிகள் சரிவர நடைபெறுகின்றனவா என்று அவர் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து, பொட்டிநாயுடு தெருவில் உள்ள திருமண மண்டபத்துக்குச் சென்ற ராஜேந்திரன், அங்கு டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி உள்ளனவா என்று ஆய்வு செய்தார். மேலும், வந்தவாசி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு அவர் நிலவேம்புக் குடிநீர் வழங்கினார்.
வந்தவாசி வட்டாட்சியர் எஸ்.அரிக்குமார், நகராட்சி ஆணையர் எஸ்.பார்த்தசாரதி, சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம், இளநிலை உதவியாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.