செங்கத்தில் கல்வி மாவட்ட  அளவிலான அறிவியல் கண்காட்சி

செங்கத்தில் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செங்கத்தில் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செங்கம் துக்காப்பேட்டை விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செங்கம் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட அரசு, தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், மாணவ, மாணவிகள் பல்வேறு அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் கந்தசாமி கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர் கூறியதாவது:
இந்தக் கண்காட்சியில் செங்கம் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கம், தண்டராம்பட்டு, புதுப்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.
இவற்றில் சிறந்த படைப்புகளை வைத்த மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, மாவட்ட அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் கலந்துகொள்ள அனுப்பப்படும் என்றார்.  உடன், அரசு, தனியார் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், செங்கம் விவேகானந்த மெட்ரிக் பள்ளித் தாளாளர், முதல்வர், தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com