கீழ்பென்னாத்தூர் அருகே மின்னல் பாய்ந்து நடந்து சென்ற மூதாட்டி இறந்தார்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த வழுதலங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் மன்னம்மாள் (85). இவர், செவ்வாய்க்கிழமை பிற்பகல் அதே பகுதியில் நடந்து சென்றார். அப்போது, மின்னல் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த அவர், அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.