பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், தூய்மையே சேவை திட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், தூய்மையே சேவை திட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ச.கணேசன் தலைமை வகித்தார். பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுனரிடையே பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், பேருந்து நிலையத்தில் துணிப்பைகளுடன் பேருந்துக்காக காத்திருந்த மூதாட்டிகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில், பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com