மாவட்டத்தில் பரவலாக மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக செங்கத்தில் 48.60 மில்லி மீட்டர் மழை பதிவானது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக செங்கத்தில் 48.60 மில்லி மீட்டர் மழை பதிவானது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை  இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை விடிய விடிய மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.  அதிகபட்சமாக செங்கத்தில் 48.60 மில்லி மீட்டர் மழை  பதிவானது. 
மற்ற இடங்களில்...
திருவண்ணாமலையில்  24, தண்டராம்பட்டில் 17.60, சாத்தனூர் அணையில் 15.40, போளூரில் 18.80, கலசப்பாக்கத்தில் 7 மி.மீட்டர் மழை பதிவானது. இந்தத் தொடர் மழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. விவசாயிகள், பொதுமக்கள் 
மகிழ்ச்சியடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com