: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேலூர், கடலூர் மண்டலங்களுக்கு இடையிலான மேசைப்பந்துப் போட்டியில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
திருவண்ணாமலையில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேலூர், கடலூர் மண்டலங்களுக்கு இடையிலான மேசைப்பந்துப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி சார்பில் கலந்து கொண்ட மாணவிகள் முதல், மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.
குறிப்பாக, பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவி எஸ்.ராகினி முதலிடம் பிடித்து, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டார்.
போட்டியில் வென்ற மாணவிகளை கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி, செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார், அறக்கட்டளை உறுப்பினர் எ.அருணாச்சலம், முதல்வர் கே.ஆனந்தராஜ், கல்விப் புல முதன்மையர் அழ.உடையப்பன் மற்றும் பேராசிரியர்கள் சனிக்கிழமை பாராட்டினர்.