எருமைவெட்டி, தூளி ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

செய்யாறு வட்டத்தைச் சேர்ந்த எருமைவெட்டி, தூளி ஆகிய கிராமங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்

செய்யாறு வட்டத்தைச் சேர்ந்த எருமைவெட்டி, தூளி ஆகிய கிராமங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பான சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
கூட்டத்தின்போது, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்த சிறப்பு முகாம்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து பஞ்சாயத்து சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஊராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.
எருமைவெட்டி கிராமத்தில் வருவாய்க் கோட்டாட்சியர் இரா.அன்னம்மாள் தலைமையிலும், தூளி கிராமத்தில் வட்டாட்சியர் மகேந்திரமணி தலைமையிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
இதில், மண்டல துணை வட்டாட்சியர்கள் (அனக்காவூர்) முருகானந்தம், (செய்யாறு) ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் நாகராஜன், பானு மற்றும் கிராம உதவியாளர்கள், ஊராட்சி எழுத்தர், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com